பிக்பாஸ் போட்டியாளரும், தொகுப்பாளினியும் அர்ச்சனா அவருடைய எளிமை, அழகு, தமிழ் உச்சரிப்பு போன்றவற்றால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். அனைவராலும் விரும்பப்படும் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் சில விமர்சனங்களுக்கும் உள்ளானார்.
பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்பு, தன்னை பற்றி எழுந்த விமர்சனங்களை கண்டு துவண்டு விடாமல் அவற்றிக்கு பதிலடியும் கொடுத்தார். மேலும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் மகள் ஜாராவுடன் இணைந்து நடித்திருந்த இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது. ‘டாக்டர்’ படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இவர் நேற்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது, இவருடைய மகள் ஜாரா கொடுத்த உணர்ச்சிகள் கலந்த பரிசை பார்த்து கதறி அழுத்துள்ளார் அர்ச்சனா. இதை பற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அர்ச்சனா கூறியுள்ளதாவது, தன்னுடைய நாற்பதாவது பிறந்த நாள் ஸ்பெஷலாக என்ன செய்தார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
ஜாரா தனக்கு ஏழு பக்கம் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மிகவும் வலுவான உணர்ச்சிகள் நிறைந்திருந்தன, பின்னர் எனக்கு என் முதல் சாலிடர் கல் பதித்த மோதிரத்தை பரிசளித்தார். எனது 40ஆவது பிறந்த நாளின் அழகான தருணத்திற்கு ஜாராவிற்கு நன்றி . இதற்கெல்லாம் உதவிய அருண் மற்றும் அனிதா, அதாவது தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் கணவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் நான் உங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளேன். நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது, என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு, ஜாரா உங்களுடைய மகள் அல்ல இரண்டாவது தாய் என்பது போல் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.