கோவை: கோவையில் உள்ள சரணாலயம் என்ற காப்பகத்தில், உள்ள 15 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் குழந்தைகளை விமானத்தில் பறக்கவைத்து அழகு பார்த்துள்ளனர் தன்னார்வலர்கள்.
கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள், 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சரணாலயம் என்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக குழந்தைகளிடம் அவர்களின் ஆசைகளை கேட்டறிந்த பொழுது பல குழந்தைகள் வானில் பறக்க வேண்டும், விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று அந்த குழந்தைகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றனர்.
தன்னார்வலர் திப்பேந்தர் சிங் கூறுகையில், “காப்பகத்தில், உள்ள அனைத்து குழந்தைகளும், தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர் குழந்தைகளுக்கு அளிக்கும் எந்தவொரு கருணைச் செயலும் வீணாகாது” என்றார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.