நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் மத்திய அரசு நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவின் இளைஞர் அணி , மாணவர் அணி மற்றும் மருத்துவரணி சார்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி , மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முன்னதாக நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உட்பட கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் ஒன்றிய அரசின் நீட் தேர்வு காரணமாக சாமானிய ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதாகவும் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நுழைவுத் தேர்வு கொண்டு வந்த போது அதனை எதிர்த்து திரும்ப பெறச் செய்தவர் என தெரிவித்தார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய சிறந்த மருத்துவர்களை கொண்டுள்ள தமிழ்நாட்டில் மருத்துவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவர் ஆனவர்கள் எனவும் , வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும், மத்தியில் I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமையும் போது நீட் தேர்வு காணாமல் போகும் எனவும் தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.