பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்,இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய மகன் ஹரிஹரசுதன் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு ஹரிஹரசுதன் தனது வீட்டின் மறு அறையில் தனது ஆசை நாய்க்குட்டியுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஹரிஹரசுதன் உயிரிழந்தார்.இடிபாடுகளில் சிக்கி நாய்க்குட்டியும் உயிரிழந்தது.
இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அன்பழகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது சுவர் இடிந்தது தெரியவந்தது. இதை அடுத்து ஹரிஹரசுதன் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
சுவர் இடிந்து வாலிபர் ஹரிஹரசுதன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.