கோவை : கோட்டை மேடு பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறாக தமிழக ஆளுநர் பேசியதாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தீவிரவாத அமைப்பு என அண்மையில் பேசியிருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று கோவை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோவை கோட்டைமேடு பகுதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சுக்கு எதிராகவும், கண்டனம் தெரிவித்தும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில், “பாப்புலர் பிரண்ட் குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம்.ஆளுநரே அவதூறு குற்றச்சாட்டை உடனடியாக திரும்ப பெறு ! RSS க்கு ஆதரவாக மக்கள் இயக்கங்கள் மீது வன்மத்தை காட்டாதே.! ஒன்றிய அரசே தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெறு!,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாள தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.