எச்சரிக்கை.. இது வனவிலங்குகள் கடந்து செல்லும் சாலை : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 6:04 pm

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை குட்டியுடன் சாலையைக் கடக்கும் யானைகள் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆசனூர் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் சாலையோரம் நின்று தீவனத்தை உட்கொண்டு விட்டு தனது குட்டியுடன் சாலையை கடந்து சென்றது.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை என்பதால் யானை உள்ளிட்ட பல விலங்குகள் அதிக அளவில் சாலையை கடக்கும் என்றும் எனவே அவ்வழியாக சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ