திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமம் செயல்பட்டு வருகிறது. பல்லடம் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குபதிவு செய்யப்பட்டது.
16 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
இதையும் படியுங்க: பெண்களை துரத்திய திமுக கட்சி கொடி பொருந்திய கார்? வைரலான வீடியோ : போலீஸ் விளக்கம்!
இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி, திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற வழக்குகளை 6 மாதத்துக்குள் விசாரணை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே 7 சாட்சிகளின் விசாரணை முடிந்தது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் விசாரணை நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று வழக்கின் விசாரணைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் கவிதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து இளம்சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமீர் கூட்டணியா திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு டெல்லி…
ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது,அதில் இந்தியா ஆடும் ஆட்டங்கள்…
கிங்ஸ்டன் பட டிரைலர் வெளியீடு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் நடித்திருக்கும் படமான கிங்ஸ்டன் படத்தின் டிரைலரை நடிகர்…
மிருகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதி. இவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார். தமிழில்,…
கணவரை பிரியும் வாரிசு பட நடிகை சமீப காலமாக சினிமா பிரபலங்கள் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருவது வாடிக்கையான…
KJ யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார் பிரபல பாடகரான கே ஜே யேசுதாஸ் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக…
This website uses cookies.