கன்னியாகுமரி: சாமியார்மடத்தில் குழித்துறை கூட்டுகுடிநீர் ராட்சத குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது.
குமரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதில் குழித்துறை கூட்டுகுடிநீர் திட்டமும் ஒன்றாகும். இந்த தண்ணீர் குடிப்பதற்கும், சமையலுக்கு பயன்படுத்த உதவுவதால், இந்த தண்ணீரையே பொதுமக்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக பல இடங்களில் வழங்கப்படவில்லை என அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் சிக்கல் நீடித்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் பைப்லைன் உடைப்பு என கூறுவதும் வாடிக்கையான விஷயமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சாமியார்மடம் பகுதியில் குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து 20 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நீரூற்று போல் வெளியேறியதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு சென்றனர்.
பின்னர் நீண்ட நேரத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மெயின் குழாயை அடைத்து தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்தினர்.
அடிக்கடி இதுபோன்று உடைப்பு ஏற்படுவதால், அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.