நாங்கள் எப்போதும் பாஜக ஆதரவுதான்.. அதிமுக பற்றி கவலையில்லை : கூட்டணி கட்சி பரபரப்பு கரத்து!!
வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டோல்கேட் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் மருத்துவ முகாமானது நடந்தது.
இதனை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் எலும்பு சிறப்பு சிகிச்சை ,பல் மருத்துவம், கண்சிகிச்சை, கண்பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை தோல் நோய் சிகிச்சை ,காது மூக்கு தொண்ட சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்களிடம் ஏ.சி.சண்முகம் நேரடியாக சென்று அளிக்கபடும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இவ்விழாவில் புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
பின்னர் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே புதிய நீதிக்கட்சி நீடிக்கிறது பாஜகவில் நான் வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றேன்.
இருந்தாலும் தோல்வியடைந்தேன் அதன் பின்னரும் பாஜக கூட்டணியில் தான் போட்டியிட்டேன் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினேன். இருந்தாலும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்போம் இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென்றால் மீண்டும் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக வேண்டுமென்ற நோக்கில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம் என கூறினார்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.