புதுச்சேரியில் நாளை நடத்தப்படும் பந்த்திற்கு வணிகர்கள் பேரமைப்பு ஆதரவு இல்லை என தமிழக வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோட்டக்குப்பம் போம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், வரும் பாராளுமன்றத் தேர்தலில் சாமானியர்களின் வாக்கு யாருக்கு வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக இருப்பதை விட்டுவிட்டு சாமானிய வணிகர்களுக்கு ஆதரவாக சட்டத்தை ஏற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
14 பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் வரக்கூடிய துறை அதிகாரிகள் எது தடை செய்யப்பட்ட பொருள்..? எது தடை செய்யப்படாத பொருள்..? என தெரியாமல் அள்ளி செல்கிறார்கள்.
கொள்ளை அடிப்பதாக நினைக்கிறார்கள் முதல் கட்டமாக கார்ப்பரேட் கம்பெனிகள் பயன்படுத்தக்கூடிய ஒருமுறை பிளாஸ்டிக் அடியோடு அரசு ரத்து செய்ய வேண்டும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.
பந்த் நடந்தால் வர்த்தகம் பாதிக்கும்.. நாங்கள் நினைத்தால் தான் பந்த் நடத்த முடியும்..புதுச்சேரியில் நாளை நடத்தப்படும் பந்த்திற்கு வணிகர்கள் பேரமைப்பு ஆதரவு இல்லை…வழக்கம் போல் கடைகள் திறந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்..
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.