காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 85. இவருக்கு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது . இவர்கள் அங்கு குடியிருந்து வந்த நிலையில் சிறுணை பெருகல் கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் வெங்கடேசன், பெருமாள், அன்னக்கிளி ஆகியோர் கடந்த 14.07.2024 அன்று இரவு புல்டேஷ்ஷர் வைத்து இடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இவர்களுடைய வீட்டை இடித்து தள்ளிவிட்டு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில் வீடு இன்றி தவித்த இந்த பெண்மணிகள் தெருவில் படுத்துறங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மனுநீதி நாள் முகாம் ஒட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்துக்கு வந்தனர்.
பின்னர் திடீரென மாவட்ட வருவாய் அலுவலர் எதிரே தரையில் அமர்ந்து கொண்டு நாங்கள் செத்துப் போறோம், நாங்கள் செத்துப் போறோம், எங்களுக்கு வீடு இல்லை, எங்களுக்கு வீடு இல்லை என கூக் குரல் இட்டவாறு தரையில் படுத்து உருண்டனர்.
இதனால் மக்கள் குறைதீர் முகாமில் அதிர்ச்சியும் ,பரபரப்பும் ஏற்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் எழுந்து வந்து அவர்களிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுதும் அவர்கள் சமாதானமடையாமல் சத்தமிட்டவாறே இருந்தனர்.
பின்னர் காவலர்கள் விரைந்து வந்து அவர்கள் வைத்திருக்கும் பையில் ஏதாவது மண்ணெண்ணெய் பெட்ரோல் போன்ற ஏதாவது அசம்பாவிதம் செய்யும் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என சோதனை இட்டனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் கூட்டரங்கில் இருந்து இழுத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.