காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 85. இவருக்கு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது . இவர்கள் அங்கு குடியிருந்து வந்த நிலையில் சிறுணை பெருகல் கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் வெங்கடேசன், பெருமாள், அன்னக்கிளி ஆகியோர் கடந்த 14.07.2024 அன்று இரவு புல்டேஷ்ஷர் வைத்து இடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இவர்களுடைய வீட்டை இடித்து தள்ளிவிட்டு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில் வீடு இன்றி தவித்த இந்த பெண்மணிகள் தெருவில் படுத்துறங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மனுநீதி நாள் முகாம் ஒட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்துக்கு வந்தனர்.
பின்னர் திடீரென மாவட்ட வருவாய் அலுவலர் எதிரே தரையில் அமர்ந்து கொண்டு நாங்கள் செத்துப் போறோம், நாங்கள் செத்துப் போறோம், எங்களுக்கு வீடு இல்லை, எங்களுக்கு வீடு இல்லை என கூக் குரல் இட்டவாறு தரையில் படுத்து உருண்டனர்.
இதனால் மக்கள் குறைதீர் முகாமில் அதிர்ச்சியும் ,பரபரப்பும் ஏற்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் எழுந்து வந்து அவர்களிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுதும் அவர்கள் சமாதானமடையாமல் சத்தமிட்டவாறே இருந்தனர்.
பின்னர் காவலர்கள் விரைந்து வந்து அவர்கள் வைத்திருக்கும் பையில் ஏதாவது மண்ணெண்ணெய் பெட்ரோல் போன்ற ஏதாவது அசம்பாவிதம் செய்யும் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என சோதனை இட்டனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் கூட்டரங்கில் இருந்து இழுத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.