திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆறு ஒன்றியங்களைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்துவது குறித்தும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக முழுவதும் 7000 இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் உழவார பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்ததியா ளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி ஊர் வலம் ஆரம்பித்த காலத்தில் இருந்து அதற்கு தடை என்பதை விதித்து வருகிறார்கள்.
பனி மாதா ஊர்வலத்தையோ மொகரம் பண்டிகை அன்று நடக்கும் ஊர்வலத்தையோ அரசு தடை செய்வதில்லை. இருப்பினும் எவ்வித தடை வந்தாலும் அதை மீறி விநாயகர் சக்தி ஊர்வலம் நடத்துவோம். இதற்காக நாங்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் திட்டமிட்டபடி ஊர்வலம் நடத்தப்படும்.
சாதிய சண்டைகள் அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்படுகின்றன. நமது சின்ன வயதில் இருந்ததை விட இப்போது சாதி சண்டை அதிகமாக இருக்கிறது.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதி சண்டை நடைபெறுகிறது. நாங்குநேரியில் ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் சண்டை ஏற்படுகிறது. சாதியை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் ஏறுகின்றன.
சாதி கட்சிகளை திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்து முன்னணியை பொறுத்தவரை சாதி பார்ப்பதில்லை அதை மறந்து தான் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும். திருவாரூர் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 10 இடங்களில் ஊர்வலம் நடத்தப்படும்.
அதேபோன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் 7000 இடங்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.