ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக அரசு தனது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல் படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தராததை கண்டித்து இன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பாக ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆசிரியர்களை வைத்து ஆசிரியர்களின் கண்ணில் குத்துவார்கள், பிரித்தாலும் சக்தியை அரசுகள் எப்பொழுதும் செய்வதுதான் அவர்களுடைய வேலையை அவர்கள் செய்கின்றனர்.
எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். எங்களின் கோரிக்கைக்கு அரசு விரைவில் இசைவு தெரிவிக்கும் வகையில் எங்களின் போராட்டம் நிச்சயம் இருக்கும்.
அரசின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம், அரசாணை 243 திரும்ப வரும் வரை ஓய மாட்டோம் என டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாணை 243 ரத்து செய்ய கோரி டிட்டோஜாக் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் செப்டம்பர் 29 30 அக்டோபர் 1 ஆகிய மூன்று நாளும் தலைமைச் செயலாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
This website uses cookies.