தமிழகம்

திமுக அரசின் மிரட்டலுக்கு பயப்படவோ அடிபணியவோ மாட்டோம் : டிட்டோ-ஜாக் ஆசிரியர்கள் சங்கம் உறுதி!!

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக அரசு தனது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களை அமல் படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தராததை கண்டித்து இன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பாக ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆசிரியர்களை வைத்து ஆசிரியர்களின் கண்ணில் குத்துவார்கள், பிரித்தாலும் சக்தியை அரசுகள் எப்பொழுதும் செய்வதுதான் அவர்களுடைய வேலையை அவர்கள் செய்கின்றனர்.

எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். எங்களின் கோரிக்கைக்கு அரசு விரைவில் இசைவு தெரிவிக்கும் வகையில் எங்களின் போராட்டம் நிச்சயம் இருக்கும்.

அரசின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம், அரசாணை 243 திரும்ப வரும் வரை ஓய மாட்டோம் என டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாணை 243 ரத்து செய்ய கோரி டிட்டோஜாக் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் செப்டம்பர் 29 30 அக்டோபர் 1 ஆகிய மூன்று நாளும் தலைமைச் செயலாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

15 minutes ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

49 minutes ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

50 minutes ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

2 hours ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

14 hours ago

This website uses cookies.