Categories: தமிழகம்

முழு ஊரடங்கு எதிரொலி: கோவில் வாசலில் குவிந்த ஜோடிகள்..ஆரவாரமின்றி நடந்த திருமணங்கள்..!!

கடலூர்: முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் வழிபாடு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.

எனினும் திருமண விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் அருகே உள்ள தேவநாதசாமி கோயிலுக்கு 10க்கும் மேற்பட்ட மணமக்கள் வருகை தந்தனர். கோயிலுக்குள் திருமணம் செய்ய நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கோயில் வாசலில் திருமணம் செய்துகொண்டனர்.

அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தப்பட்டன.

முழு ஊரடங்கையொட்டி கோயில் திறக்கப்படாததால் கோயிலின் வாசலில் ஏராளமானோர் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைவான உறவினர்கள் மட்டும் திருமண விழாவில் அனுமதிக்கப்பட்டனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!

"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…

8 hours ago

ரிலீஸ் ஆனது ‘குட் பேட் அக்லி’ தீம் மியூசிக்..ரிப்பீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…

9 hours ago

ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!

இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…

10 hours ago

6 மாசத்துக்கு எதுவும் கேட்காதீங்க.. திடீரென மாறிய தமிழிசை முகம்!

பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…

10 hours ago

போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!

பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…

11 hours ago

செங்கல் சூளையில் கேட்ட அலறல் சத்தம்.. தப்பியோடிய காதல் கணவர்!

திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…

11 hours ago

This website uses cookies.