Categories: தமிழகம்

விடிய விடிய நடந்த ஆடல் பாடல் : போலீசாரின் அனுமதியோடு களைகட்டிய நிகழ்ச்சி… நீதிமன்ற உத்தரவை மதிக்காத காவல்துறையால் சர்ச்சை!!

திருச்சி : நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு விடிய விடிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய காவல்துறை.

கோவில்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி முன்பு வந்தது. அப்போது அவர் கோவில் திருவிழாக்களில் ஆடல் மற்றும் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், கோவில்களில் திருவிழாக்கள் வழக்கம்போல நடைபெறலாம் என்றும், ஆனால் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது என்றும் தெரிவித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஓரத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில். கடந்த 16ஆம் தேதி மாரியம்மன் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஓரத்தூர் கிராமத் கோவில் திருவிழாவில் நேற்று இரவு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி போலீஸாரின் அனுமதியுடன் விடிய விடிய நடைபெற்றது.

குறிப்பாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடையும் ஆனால் நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி அவர்களின் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடும்படி ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்திய கோவில் நிர்வாகிகள் மீதும், பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்த கல்லக்குடி காவல் நிலைய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்‌.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

What Bro.. Why Bro? சரத்குமார் கடும் தாக்கு! தொடரும் நடிகர்களின் விமர்சனம்?

சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…

21 minutes ago

படப்பிடிப்பில் ‘அந்த’ நடிகை வந்தா தனுஷ் வாயை பிளந்துட்டு போவான்.. ராதிகா சொன்னது யாருனு பாருங்க!

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…

34 minutes ago

75 நிமிட விசாரணை.. 63 கேள்விகள்.. சீமான் கேட்ட ஒரே கேள்வி!

நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…

56 minutes ago

அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி? எந்த படம்னு தெரியுமா!

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…

1 hour ago

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

3 hours ago

அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…

4 hours ago

This website uses cookies.