விஜய், ஆளுநரைச் சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை பாராட்டியது அரசியல் கவனம் பெற்றுள்ளது.
சென்னை: வழக்கமாக, ஆளும் திமுக அரசில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்வதுண்டு. ஆனால், இந்த முறை மற்ற இரு கட்சிகளும் செய்யாத ஒன்றை, தவெக தலைவர் விஜய் செய்துள்ளார்.
ஆம், கட்சி தொடங்கி 11 மாத காலம் முடிவடையும் தருவாயில், முதன் முதலாக தமிழகத்தையே அதிர்வலைக்கு உள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து முக்கிய கோரிக்கையை முன்வைத்து தவெகவினர் ஆளுநரைச் சந்தித்து உள்ளனர்.
விஜய், இந்தச் சம்பவம் நடந்து வெகு நேரத்திற்கு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததால், எக்ஸ் தளத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவரே இன்று ஆளுநரைச் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளையும் வைத்திருப்பது, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உண்டாக்கி உள்ளது.
அதேநேரம், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கியது, விஜய்க்கு மிகப்பெரிய எதிர்வினையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சந்திப்பு எடுபடுமா என்றால், இது வழக்கமாக பாஜக செய்வது தான் என சிலர் தெரிவிக்கின்றனர்.
இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், அண்ணாமலையும், விஜயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். இதனால், பாஜக பாணியில் விஜய் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்து உள்ளது. ஆனால், பாஜகவை தனது கொள்கை எதிரி எனக் கூறி இருந்தார் விஜய்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் அதிரடி கைது.. லெட்டர் கொடுத்ததாக குற்றச்சாட்டு!
மேலும், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, “கவர்னரைச் சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் டெல்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். இப்போது தவெக தலைவர் நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்கிறது.
கவர்னர் ரவி அவர்களை, விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் எலைட் அரசியல்” எனத் தெரிவித்து உள்ளார்.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.