Categories: தமிழகம்

திருச்சி விமான நிலையத்தில் குழந்தைகளுடன் வந்த தம்பதி செய்த காரியம்.. சுங்கத்துறை அதிகாரிகள் ஷாக்!!!

திருச்சி விமான நிலையத்தில் குழந்தைகளுடன் வந்த தம்பதி செய்த காரியம்.. சுங்கத்துறை அதிகாரிகள் ஷாக்!!!

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கண்ட அதிகாரிகள் அவரை தனித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்தபோது அவர் தனது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 61லட்சத்து 21ஆயிரத்து 500 மதிப்புள்ள 1கிலோ 60கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அந்த விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணிகளான கணவன், மனைவி இரண்டு குழந்தைகளை சோதனை மேற்கொண்ட போது அந்த தம்பதியினர் தங்கள் குழந்தைகளின் ஷு மற்றும் உள்ளாடையில் தங்கத்தை நூதன முறையில் மறைத்து ரூபாய் 1கோடியே 8 லட்சத்து 10 ஆயிரத்து 800 மதிப்புள்ள 1 கிலோ 872கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

தொடர்ந்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் ரூபாய் 1கோடியே 69லட்சத்தி 32ஆயிரத்து 300 மதிப்புள்ள 2கிலோ 932 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இவர்கள் யாருக்கா கடத்தினர்? வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

15 minutes ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

33 minutes ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

2 hours ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

2 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

3 hours ago

தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…

3 hours ago

This website uses cookies.