தமிழகம்

தாயும் சேயும் அடுத்தடுத்து உயிரிழப்பு.. ஆம்பூரில் இருந்து சேலம் வரை சென்றும் பலனில்லை!

திருப்பத்தூர், ஆம்பூரைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இறந்த நிலையில், குழந்தையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் – துர்காதேவி தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்த நிலையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, தனது முதல் பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவனையில் துர்காதேவி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அப்போது துர்காதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், துர்காதேவிக்கு கர்ப்பப்பையில் இருந்து அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளதால், அவரை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், இறுதியாக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.13) துர்காதேவி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் நேற்று (நவ.14) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே, துர்காதேவிக்கு பிறந்த குழந்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. ஆனால், அந்த குழந்தையும் நேற்று உயிரிழந்தது.

அதனைத் தொடர்ந்து, தாய், சேயின் உடலை நேற்று இரவு அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.இந்நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்காதேவி அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காததாலே உயிரிழந்ததாகக் கூறியும், மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது உறவினர்கள் ஆம்பூர் – பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: எச்சில் துப்பிய அமீர் கான்..படத்தை உதறி தள்ளிய நடிகை.. கொடுமையின் உச்சம்..!

அது மட்டுமல்லாமல், தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தை இறப்பதற்கு காரணமாக இருந்த ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என துர்காதேவியின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார். இந்நிலையில், துர்காதேவியிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சியாமளாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கண்ணகி உத்தரவிட்டு உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

27 minutes ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

1 hour ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

2 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

2 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

3 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

3 hours ago

This website uses cookies.