மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை மதுரை வந்த அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களை சந்தித்த கூறியதாவது: ஈரோடு கிழக்கில் நடந்ததுதான் விக்கிரபாண்டி இடைத்தேர்தலில் நடக்கும் என்றும் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் என்பதால் தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலின் போது, 36 இடங்களில் மக்களை பட்டியில் அடைத்து வைத்தனர். அங்கு, ஜனநாயக படுகொலை நடைபெற்றது. மாநில அரசுக்கு, தேர்தல் ஆணையம், போலீஸ், அரசு அதிகாரிகள் துணை நிற்கின்றனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது என கருதியதால் தான் , அங்கு அதிமுக போட்டியிடவில்லை. அங்கு பணத்தை வாரி இறைப்பார்கள். பரிசு பொருட்கள் அள்ளி கொடுப்பார்கள்.
அமைச்சர்கள் பூத் வாரியாக பிரித்து பண மழை பொழியும். சுதந்திரமாக தேர்தல் நடக்காது. லோக்சபா தேர்தலில், விக்கிரவாண்டியில் அதிமுக 6 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றது.
லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் வேறு வேறு. மக்கள் இரண்டையும் பிரித்து பார்த்து சிந்தித்து ஓட்டுப் போடுவார்கள். 2014 ல் 9 தொகுதிகளில் 3ம் இடம் பிடித்தது. 2 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழந்தது. வெற்றி தோல்வி மாறி மாறி வரும். 2026ல் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.