தமிழகம்

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாரா? குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள்.. பேரவையில் நடந்தது என்ன?

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் திமுக சிவா உள்பட திமுகவினர் வெளியேற்றப்பட்ட பின்னணி குறித்து பார்க்கலாம்.

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, லஞ்சம் பெற்ற வழக்கில், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் சிபிஐயால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று (மார்ச்.24) எதிரொலித்தது. கூட்டம் தொடங்கியதும், நடைபெற்ற கேள்வி நேரத்தில், எதிர்கட்சித் தலைவரும், திமுக எம்எல்ஏவுமான சிவா, சிபிஐயால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது என்பது புதுச்சேரிக்கு மிகப்பெரிய தலைகுனிவு எனக் கூறினார்

எனவே, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, அவசர பிரச்னையாக இதனை எடுத்துப் பேச வேண்டும் என அவர் கோரினார். ஆனால், அவ்வாறு சட்டத்தில் இடமில்லை என்பதால், கேள்வி நேரத்துக்குப் பிறகு இது பற்றி முதல்வர் அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிப்பார்கள் என சபாநாயகர் செல்வம் பதிலளித்தார்.

இதனையடுத்து, திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கோஷமிட்டதுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, அனைவரையும் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிடவே, சபைக் காவலர்கள் எதிர்கட்சித் தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் இதனிடையே சட்டப்பேரவைக்கு தாமதமாக வந்த காரைக்கால் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம் மற்றும் நாக தியாகராஜன் ஆகியோர் அவைக்கு வந்து, வெளியேற்றியவர்களை மீண்டும் அவைக்குள் அழையுங்கள், அவர்கள் முக்கியப் பிரச்சினையை தான் பேசியுள்ளார் என்றனர்.

இதையும் படிங்க: உள்ள யாரு.. வெளிய நானு.. பார்ட் டைம் போலீஸ் சிக்கி சிறை சென்றது எதற்காக? பகீர் பின்னணி!

அதற்கு சபாநாயகர் செல்வம், “இது சிபிஐ விவகாரம். மத்திய அரசு அதற்கு பதில் கூறும். சட்டமன்றம் அதற்கு பதிலளிக்கும் இடத்தில் இல்லை” எனக் கூறினார். மேலும் அமைச்சர் பதவி விலகக் கூற வேண்டிய அவசியமில்லை என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கோஷமிட அவையில் குழப்பம் நிலவியது.

அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “கேள்வி நேரத்துக்குப் பிறகு விவாதிக்கலாம்” எனக் கூறினார் . மேலும், “தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தாரா? சபாநாயகர் கூறிய பிறகு அவைக்கு நடுவில் நாடகம் தேவையில்லை” எனக் கூறினார். இதனையடுத்து, தாமதமாக வந்த இரண்டு திமுக எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Hariharasudhan R

Recent Posts

இன்னும் எதுக்கு கண்ணாமூச்சி? இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு!

நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல்…

6 minutes ago

ரஜினிக்கு டூப் போட்டு நடித்த மனோஜ் : எந்த படத்துக்கு தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

13 minutes ago

நடிகையை உருகி உருகி காதலித்த மனோஜ் பாரதிராஜா.. மனைவி செய்த தியாகம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில்…

47 minutes ago

மீண்டும் மெல்ல உயரத் தொடங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 195…

57 minutes ago

உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பெண்ணுக்கு மிரட்டல்.. திருமணம் செய்ய மறுத்ததால் காவலர் வெறிச்செயல்!

கோயம்பேடு போக்குவரத்து போலீசில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர் பகுதியில்…

1 hour ago

அதிர்ச்சியில் நடிகை மீனா… மனோஜ் மறைவு குறித்து திடீரென போட்ட பதிவு!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர்,பொதுமக்கள்…

2 hours ago

This website uses cookies.