தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா? சிபிஐ விசாரணை தேவை : தமிழிசை விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2024, 7:04 pm

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;”பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பு மிகுந்த மனவேதனையை தந்துள்ளது.

அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்புலம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா?’ தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டன.

அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் தொடர்கிறது. முதல்வரின் சொந்த தொகுதி குற்றங்களுக்கு புகலிடமாக மாறியுள்ளது.”

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!