தமிழகம்

டிரெண்டிங்கான அல்லு அர்ஜுன்.. பின்னணியில் இப்படி ஒரு அரசியலா?

அல்லு அர்ஜுன் கைதானது முதல் ஆளும் காங்கிரஸ் அரசின் விமர்சனம் வரையிலான நீண்ட அரசியல் குறித்து இதில் பார்க்கலாம்.

ஹைதராபாத்: கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா 2’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கான சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார்.

இது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கடந்த வாரம் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீன் கிடைத்த அவர், ஒருநால் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் அளிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் விவகாரம் அரசியலாக மாறியது மட்டுமின்றி, தெலுங்கானா சட்டப்பேரவை வரையிலும் சென்றது. அந்த வகையில், இதுதொடர்பாக தெலுங்கான சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பெண் உயிரிழந்து தெரிந்ததால் அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை.

அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா? அல்லது கண் அல்லது கிட்னியை இழந்தாரா? அவரது வீட்டிற்குச் சென்று சினிமா பிரபலங்கள் பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன? நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது கவலைப்பட்டு உள்ளீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, அல்லு அர்ஜுன், “என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளன. தவறான குற்றச்சாட்டுகளும் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு அரசியல் தலைவரையோ அல்லது அதிகாரிகளையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெற்று இருக்கிறது” என்றார்.

மேலும், அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்நேகா ரெட்டியின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான கச்சரலா சந்திரசேகர் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றியவர். ஆனால், 2014ஆம் ஆண்டு சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்டிர சமதியில் (BRS) இணைந்தார்.

பின்னர், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாகார்ஜுன சாகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அங்கு வேட்பாளராக நோமில் பகத்தை நிறுத்தியது பிஆர்எஸ். இதனால் அதிருப்தியில் அடைந்த கச்சரலா சந்திரசேகர் ரெட்டி, மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பினார்.

இதையும் படிங்க: மாமன் மகளையும் விட்டு வைக்கல.. ஆசை வலையில் வீழ்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள்.. என்ன நடந்தது?

அப்போது மக்களவைத் தேர்தல் வந்த நிலையில், மல்காஜ்கிரி தொகுதியில் போட்டியிட முயன்றும் அது கூடவில்லை. எனவே, காங்கிரஸில் இருந்தும் விலக முடிவெடுத்த நிலையில் தான் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிஆர்எஸ் கட்சியில் இருக்கும்போது, தான் விரும்பிய நாகார்ஜுன சாகர் தொகுதியில், தனது மருமகனும், நடிகருமான அல்லு அர்ஜுனை அழைத்து மண்டபம் ஒன்றின் திறப்பு விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் கச்சரலா சந்திரசேகர் ரெட்டி நடத்திக் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

5 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

6 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

6 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

6 hours ago

This website uses cookies.