57 வருஷமா திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்து என்ன பயன்? மேடையில் ஓபிஎஸ் முன்னிலையில் பேசிய அன்புமணி!!
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், இன்று காலை தான் பிரதமர் மோடி 3வது முறையாக இந்திய பிரதமராக வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக உள்ளது. நாட்டின் நலன் கருதி, தமிழகத்தின் நலன் கருதி இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். கடந்த 57 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகள் தான் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டு இறுகிறார்கள். அதில் இருந்து நமக்கு மாற்றம் வர வேண்டும். மக்கள் மாற்றத்துக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அந்த ஏக்கத்தை தணிக்க தான் பாஜக பாமக கூட்டணி அமைத்துள்ளது என அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மேடையில் ஓ.பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன் உள்ளிட்ட திராவிட கட்சிகள் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.