என்னாச்சு நண்பா? அஜித் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த த.வெ.க தலைவர் விஜய்!!
நடிகர் அஜித்குமார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீரென்று நேற்று அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகன் ஆத்விக் பிறந்த நாளை குடும்பத்துடன் அஜித் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில் மருத்துவமனையல் அஜித் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சை முடிந்து அஜித் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டது.
இடதையடுத்து நேற்று அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில் பின்னர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அது உண்மையில்லை, காது – மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டதாகவும், இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு தான் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கூறினார்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அஜித்துக்கு விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தாக கூறப்படுகிறது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அஜித் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விஜய் விசாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.