தமிழகம்

Fengal Cyclone எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்? வெளியான முக்கிய தகவல்!

ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) எப்போது கரையைக் கடக்கும் என இன்னும் கணிக்கப்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழையும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது.

அதேநேரம், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் சாரல் முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.26) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.27) புயலாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக, இன்று (நவ.26) மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.

அதேபோல், நாளை கடலூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவாரூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, நாளை மறுநாள் (நவ.28) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிககன மழை பெய்யும்.

மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது, நவம்பர் 29ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பொழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: போக்சோ குற்றவாளிக்கு சூப்பர் தண்டனை.. இனி தப்பு பண்ணவே பயம் வரணும்!

மேலும், வருகிற 30ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று கூறினார்.

மேலும், நாளை உருவாக உள்ள ஃபெங்கல் (Fengal) புயலானது, எப்போது கரையைக் கடக்கும் என்று இன்னும் கணிக்கப்படவில்லை எனக் கூறிய பாலச்சந்திரன், புயலாக வலுப்பெற்று தமிழ்நாடு, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

ரஜினி – ஜெயலலிதா நடிக்க இருந்த படம் இதுவா? நடிக்காததற்கு ஜெயலலிதாவே சொன்ன காரணம்!

முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…

21 seconds ago

ஊரே கொண்டாடும் DRAGON… படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை!

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…

27 minutes ago

சோளக்காட்டில் 10ம் வகுப்பு மாணவி.. 12ம் வகுப்பு மாணவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. கரூரில் அதிர்ச்சி!

கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…

44 minutes ago

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!

தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…

2 hours ago

கணவருடன் கவர்ச்சி குத்தாட்டம்… நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்!

வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…

2 hours ago

மீண்டும் தலைதூக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…

2 hours ago

This website uses cookies.