மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு எப்போது..? முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்!
மதுரை அவனியாபுரம் பாலமேடு மற்றும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகின்ற 15 16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி தமிழக அரசு சார்பில் மதுரை அலங்காநல்லூரில் வருகின்ற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் அமைந்துள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க வருகை தர உள்ளார் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் அங்கே நடைபெறும் அதற்கு முன்னதாக பாலமேட்டில் 16ஆம் தேதி பாலமேடு பொது மகாலிங்கசாமி மடத்து கமிட்டி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டியையும் அவனியாபுரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது ஜல்லிக்கட்டு போட்டி போட்டியில் முதல் பரிசு பெறும் காளை மற்றும் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது சிறப்பான முறையில் நடைபெற மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு கீழக்கரையில் உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண முதலமைச்சர் வருகை தர உள்ளார் மேலும் அமைச்சர் உதயநிதி மற்றும் மற்ற அமைச்சர்களும் அங்கு வருகை தர உள்ளார்கள் என்று தெரிவித்தார்
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.