மேட்டுப்பாளையம் : கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும் வகையில் யானையின் இருப்பிடத்தை தீவிரமாக வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளது. குறிப்பாக அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது இப்பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் காட்சிகளில் உடல் பலவீனத்துடன் காணப்படும் காட்டு யானை ஒன்று ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவது தெரிகிறது.
இந்த நிலையில் இந்த காட்டு யானையினை பிடித்து சிகிச்சையளிக்கும் வகையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் யானை விரும்பி உண்ணும் பலாப்பலங்களில் மருந்துகளையும்,தாது உப்புக்கட்டிகளையும் அதன் வழித்தடங்களில் வைத்தனர்.
ஆனால் மற்றொரு யானை அந்த பலாப்பழங்களை சாப்பிட்டுள்ளது. இதனையடுத்து காயம்பட்ட யானையை தேடும் பணியில் வனத்துறையினர் இன்றோடு 8வது நாளாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.