கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 412 ரூபாய் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதாகவும் அதேபோல் பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும் எனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கியுள்ளது.
முற்றுகை போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பிற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் 50க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.