Categories: தமிழகம்

ஆன்லைனில் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு இத சீக்கிரம் செய்யுங்க : அமைச்சரின் அதிரடி ஆர்டர்!!

தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், வருவாய் துறை செயல்பாடுகளை வேகப்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும். தாலுகா, விஏஓ, ஆர்டிஓ அலுவலங்களில் பொதுமக்கள் சொல்லுகிற கோரிக்கைகளை குறிப்பிட்ட தினங்களுக்காக அலுவலர்கள் முடித்துக்கொடுக்க வேண்டும் என்கிற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கும், வேறு மாவட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் வருவாய் துறையில் உள்ளது. டெல்டாவில் நில பிரச்சனை, குத்தகை பிரச்சனை, கோயில், மடத்து நிலங்கள் தொடர்பாக பிரச்சனைகள் அதிகம் உள்ளன.

கோயில் நிலங்களில் குடியிருப்போர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்பது அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை சட்டப்படி எப்படி கையாளுவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்தாண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்தவதற்கான காலக்கெடு இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது.

எனவே, விவசாயிகளுக்கு இன்னும் நான்கு தினங்களில் அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமங்களில் விஏஓ அலுவலகங்கள் வேண்டும் என பலதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஊராட்சி மற்றும் வருவாய் துறை இணைந்து, தமிழகத்தில் முதற்கட்டமாக இந்தாண்டு கிராம செயலகம் என்ற பெயரில், 876 இடங்களில் ஊராட்சி அலுவலகங்கள், கூட்ட அரங்கம், விஏஓ அலுவலகங்களை என மூன்றும் சேர்த்து ஒரு கட்டிடத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து கட்டிடம் கட்டப்படும்.

சாதி,வருவாய், இருப்பிட சான்றிதழை போன்றவற்றை வழங்க ஒரு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் விண்ணப்பம் செய்யும் நிலையில், அதை அலுவலர்கள் சரிபார்த்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்ள வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

2 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

2 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

3 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

3 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

4 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

4 hours ago

This website uses cookies.