சிவாஜி கணேசனை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னை: கடந்த 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, பெரியார் வீட்டுப் பேரனாக பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் (EVKS Elangovan), டிசம்பர் 14, 2024-ல், அதாவது சரியாக 75வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் இருக்கும்போது காலமாகி உள்ளார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இறந்திருப்பது, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு இன்று இரங்கல் தெரிவித்துள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் போன்று, அன்று தனது மாணவர் காங்கிரஸ் பருவத்தில் நடிகரும், தமிழக முன்னணி கட்சித் தலைவருமான சிவாஜி கணேசனால் ஈர்க்கப்பட்டவர். ஏன், அவரை அரசியல் குருவாகவும் ஏற்றுக் கொண்டவர்.
பின்னாளில், நடிகரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர் உடன் இணைந்து, அவரது மறைவிற்குப் பிறகு சிவாஜி கணேசனுக்கு ஆதரவாக தனது முதல் சட்டமன்ற பதவியைத் துறந்து ஜானகி அணிக்காக நின்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அது மட்டுமின்றி, மூப்பனார் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவியதை அடுத்து, அதனை காங்கிரஸ் உடன் இணைக்க அரும்பாடுபட்டவர்.
இதையும் படிங்க:
அது மட்டுமின்றி, பல தேர்தல்களில் தோல்வியைத் தழுவினாலும், கோபிசெட்டிப்பாளையம் எம்பியாகத் தேர்வு செய்தபோது, மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். அதோடு, இரண்டு முறை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து, அதன் சோதனை காலத்தில் அப்போது ஆண்ட திமுகவை தனது விமர்சனத்தால் திரும்பிப் பார்க்க வைத்தவர் எனலாம்.
ஆனால், அதே திமுக உடன் காங்கிரஸ் கைகோர்க்கும் நிலை வந்தபோதும், பல இடங்களில் தனது நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருந்தவராக ஈவிகேஎஸ் அறியப்பட்டார். ஆனால், அவரது வீட்டில் ஒரு இருள் சூழ்ந்தது. அதுதான, அவரது மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த திருமகனின் மறைவு.
இதற்குப் பிறகு, திமுக தயவுடன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இந்த நிலையில் தான், மகன் இறந்த ஒரு ஆண்டுக்குள் தந்தையும் இறந்து, குடும்பத்தில் மட்டுமின்றி, கட்சியினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.