தமிழகம்

இன்னும் 3 நாட்களில் பிறந்தநாள்.. திடீரென மறைந்த பிரபல எழுத்தாளர்!

மர்மதேசம் என்ற நூல் முதல் தேசிய விருது வென்ற படம் வரை தனது எழுத்துக்களால் எழுத்துலகை கட்டி ஆண்ட இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்.

சென்னை: 1958ஆம் ஆண்டு பிறந்தவர் இந்திரா சௌந்தர்ராஜன். மதுரையில் வசித்து வந்த இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். பின்னாட்களில் எழுத்தின் மீது கொண்ட காதலால், தன்னுடைய தாயின் பெயரான ‘இந்திரா’வை தன் பெயருடன் சேர்த்து இந்திரா சௌந்தர்ராஜன் என்பதை தன் எழுத்துப் பெயராக மாற்றிக் கொண்டிருந்தார்.

முன்னதாக டிவிஎஸ் நிறுவனத்தில் துணைப் பொறியாளராக பணியாற்றிய இவர், தற்போதும் மதுரை டிவிஎஸ் நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 1978ஆம் ஆண்டு ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற கதைக்காக கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசை வென்றார். தொடர்ந்து, ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் கதை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலிற்கான மூன்றாம் பரிசினையும் பெற்றது.

மேலும் இவர் புகழ்பெற்ற பல சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றை எழுதி உள்ளார். இதன்படி, என் பெயர் ரங்கநாயகி மற்றும் மர்ம தேசம் ஆகிய படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. மேலும், அத்திப்பூக்கள் என்ற தொடர் இவரது எழுத்தில் வெளி வந்த அழியாத தொடர் ஆகும். இந்நிலையில்தான், நேற்று மதுரையில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்துள்ளார்.

66 வயதாகும் இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர் மறைவு எழுத்துலகிலும், திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு உரிய மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், நவம்பர் 13ஆம் தேதி அவரது பிறந்தநாள் வரும் நிலையில், நவம்பர் 10ம் தேதியான இன்று, அதாவது இன்னும் 3 நாட்களில் 66வது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் மறைந்திருப்பது, பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள்.. மகன் உணர்வுப்பூர்வ பகிர்வு!

இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், ” “பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

6 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

7 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

8 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

8 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

9 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

10 hours ago

This website uses cookies.