பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில், ஞானசேகரன் போனில் சார் என அழைத்தது யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “உலக அளவிலே புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு 7.45 மணியளவில், ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவியைப் பார்த்துள்ளார்.
அப்போது, அந்த மாணவனை அடித்து உதைத்து, அங்கிருந்த மாணவியை பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்தச் செயல்பாட்டை செல்போனில் ஞானசேகரன் படம்பிடித்ததாகவும், பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஞானசேகரனுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் யாரிடமோ சார், சார் எனப் பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், காவல் உயர் அதிகாரி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ஒருவர் தான். அவர் ஞானசேகரன் தான் என்கிறார். அப்படியெனில் போனில் சார், சார் என்று பேசியது யாரிடம்? அதுமட்டுமின்றி பல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில், எப்படி அந்த நபர் சாதாரணமாக சுற்றித் திரிய முடிந்தது?
இதனால் பெற்றோர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். அந்த பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 56 மட்டுமே இயங்குகின்றன, மற்றவை ஏன் இயங்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அரசு செயல்படுகிறதா? இந்த ஞானசேகரன் ஒரு சரித்தரப் பதிவேடு குற்றவாளி.
இதையும் படிங்க: அமைச்சருக்கும், ஆணையருக்கும் முரண்பாடு.. யாரைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறது? அண்ணாமலை கேள்வி!
இப்படிப்பட்ட நபர் தங்குதடையின்றி அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்று வரும் நிலையிலா வைத்திருப்பது?. மேலும், காவல்துறை ஆணையர், 100க்கு புகார் வந்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்கிறார். ஆனால், இன்று, அந்த துறையின் அமைச்சர் சொல்கிறார், 100க்கு புகார் வரவில்லை என்று.
காவல் நிலையத்திற்கு நேரில் வந்துதான் புகார் அளித்ததாக முரண்பட்ட தகவலை அமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். மேலும், இந்த முரண்பட்ட தகவல்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.