அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தில் சார் என ஞானசேகரன் 3 முறை கூறியதாக மாணவி விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: யார் அந்த சார்? யார் அந்த சார்? என்பதே தற்போது வரை தமிழக எதிர்கட்சிகள் எழுப்பு வரும் கேள்வி. இந்த நிலையில், அந்த சார் யார் என்பதை அம்மாணவியே உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவில் மாணவி விசாரணையில் கூறிய தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது.
ஏனென்றால், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், வேறொரு சாரிடம் தன்னை நெருக்கமாக இருக்கச் சொன்னதாகவும், நான் மிரட்டிவிட்டு வந்துவிடுவேன் என அவன் அவரிடம் கூறியதாகவும், மொத்தம் 3 முறை சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாகவும் மாணவி SIT எனப்படும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், போலீசார் அளித்த தகவலின்படி, அவரது செல்போன் ஃப்ளைட் மோடில் போடப்பட்டிருந்ததாக கூறியிருந்தனர். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியின்படி, அவரது மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது, அதனை அவர் எடுத்து பேசுவது போன்று உள்ளதாக இருக்கிறது என்ற தகவலில் வெளியாகி திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், வேறு ஏதேனும் சிம் கார்டு அல்லது மொபைல் போனை ஞானசேகரன் வைத்திருந்தாரா என்ற கேள்விக்கான விடையையும் தேடி வரும் சிறப்பு விசாரணைக்குழு, இந்தச் சம்பவத்தில், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரும், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்புடையதாக தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி வேண்டும்.. நிதியுதவியை உதறிய உறவினர்கள்.. விக்கிரவாண்டி குழந்தை பலியான விவகாரத்தில் பரபரப்பு!
எனவே, அண்ணா பல்கலை விவகாரம் தீவிரம் அடைந்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவும் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.