தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திமுக.. யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சமீபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த தொகுதி காலியானதாக தலைமைச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை செல்வப்பெருந்தகையும் அறிவித்துள்ளார். இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த வி.சி.சந்திரகுமார்? வி.சி.சந்திரகுமார், ஈரோட்டைச் சேர்ந்தவர். கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து சந்திரகுமார், பின்னர் தேமுதிக சார்பில் 2006 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவ்வாறு எம்எல்ஏவாக மட்டுமின்றி, கட்சிக் கொறடாவாகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் சந்திரகுமார் இருந்தார்.

முக்கியமாக, சட்டப்பேரவையில் கூட விஜயகாந்த் இல்லாத நிலையில், சந்திரகுமார் தான் கட்சியை நடத்தி வந்தார். இருப்பினும், 2016ஆம் ஆண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறி மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வி.சி.சந்திரகுமார் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!

ஆனால், அவரது கோரிக்கை ஏற்கபடாத நிலையில், சந்திரகுமார், பார்த்தீபன் போன்றோர் பிரிந்து வந்து ‘மக்கள் தேமுதிக’ என்ற அமைப்பை ஆரம்பித்தனர். அவர்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க, சந்திரகுமார் உள்ளிட்ட 3 பேருக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் மூவருமே தோல்வியைத் தழுவினர். அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஜுன் 16ஆம் தேதி, சென்னை, கோபாலபுரத்தில் அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினர். மேலும், மக்கள் தேமுதிக அமைப்பை திமுகவுடன் இணைப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து, தற்போது திமுக கொள்கை இணை பரப்புச் செயலாளராக வி.சி.சந்திரகுமார் செயல்பட்டு வருகிறார்.

Hariharasudhan R

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

3 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

5 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

6 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

6 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

8 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

8 hours ago

This website uses cookies.