தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திமுக.. யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சமீபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த தொகுதி காலியானதாக தலைமைச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை செல்வப்பெருந்தகையும் அறிவித்துள்ளார். இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த வி.சி.சந்திரகுமார்? வி.சி.சந்திரகுமார், ஈரோட்டைச் சேர்ந்தவர். கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து சந்திரகுமார், பின்னர் தேமுதிக சார்பில் 2006 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவ்வாறு எம்எல்ஏவாக மட்டுமின்றி, கட்சிக் கொறடாவாகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் சந்திரகுமார் இருந்தார்.

முக்கியமாக, சட்டப்பேரவையில் கூட விஜயகாந்த் இல்லாத நிலையில், சந்திரகுமார் தான் கட்சியை நடத்தி வந்தார். இருப்பினும், 2016ஆம் ஆண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறி மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வி.சி.சந்திரகுமார் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!

ஆனால், அவரது கோரிக்கை ஏற்கபடாத நிலையில், சந்திரகுமார், பார்த்தீபன் போன்றோர் பிரிந்து வந்து ‘மக்கள் தேமுதிக’ என்ற அமைப்பை ஆரம்பித்தனர். அவர்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க, சந்திரகுமார் உள்ளிட்ட 3 பேருக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் மூவருமே தோல்வியைத் தழுவினர். அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஜுன் 16ஆம் தேதி, சென்னை, கோபாலபுரத்தில் அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினர். மேலும், மக்கள் தேமுதிக அமைப்பை திமுகவுடன் இணைப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து, தற்போது திமுக கொள்கை இணை பரப்புச் செயலாளராக வி.சி.சந்திரகுமார் செயல்பட்டு வருகிறார்.

Hariharasudhan R

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

10 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

11 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

13 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

14 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

15 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

16 hours ago

This website uses cookies.