தமிழகம்

குத்துப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதியாதது ஏன்? ஐகோர்ட் சரமாரி கேள்வி!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரைக் கத்தியால் குத்திய இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

சென்னை: சென்னை மாவட்டம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த நவம்பர் 13ஆம் தேதி பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (25) என்ற இளைஞர் கத்தியால் குத்தினார்.

இதில், மருத்துவரின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் நலமானார். இதனிடையே, கத்தியால் குத்திய விக்னேஸ்வரன் மீது கொலை முயற்சி, பொது ஊழியரை தாக்கியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து, விக்னேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பிலும் டாட்டூ? திருச்சி ஏலியன்ஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்!

அப்போது, போலீசார் தரப்பில், பணியில் இருந்த அரசு மருத்துவரைக் கத்தியால் குத்தியதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வரன் தரப்பில், தன் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக மருத்துவர் செயல்பட்டாதால் ஆத்திரத்தில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? என போலீசாருக்கு கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என விக்னேஷ்-க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Hariharasudhan R

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

26 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

29 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

57 minutes ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

1 hour ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

2 hours ago

This website uses cookies.