வாக்களிக்க ஜோதிகா ஏன் வரல? INSTAGRAM பதிவால் சூர்யாவுக்கு ஏற்பட்ட தலைவலி… நெட்டிசன்கள் விளாசல்!!
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை செலுத்தினர்.
இந்த முறை தமிழகத்தில் 69 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தன. பல்வேறு நடிகர் நடிகைகளை தங்களின் படப்பிடிப்பை கூட ரத்து செய்துவிட்டு ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
இது போல் நடிகர் சூர்யா, அவருடைய சகோதரர் கார்த்தி ஆகியோரும் வாக்களிக்க வந்தனர். அப்போது ஜோதிகா வரவில்லை, செய்தியாளர்களை சந்தித்த போது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். மற்றவர்களும் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்றார். அப்போது செய்தியாளர்கள் “ஜோதிகா மேடம் வாக்களிக்க வரவில்லையா” என கேட்டனர்.
மேலும் படிக்க: எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடரும்… டெல்லி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வைத்த நம்பிக்கை!!
ஆனால் சூர்யா, அந்த கேள்விக்கு எந்த பதிலையும் அளிக்காமல் அவர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். இதனால் ஜோதிகா ஏதாவது படப்பிடிப்பில் இருந்திருப்பார். அதனால் அவர் வர முடியாத சூழல் உண்டாகியிருக்கும் என மக்கள் சமாதானப்படுத்திக் கொண்ட நிலையில் இன்ஸ்டா பேஜில் ஜோதிகா ஒரு குண்டை தூக்கி போட்டார்.
அதாவது நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ளை வீடியோவாக போட்டுள்ளார். இதனால்தான் அவர் வாக்களிக்க வரவில்லை என தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்திய குடிமகளாக இருந்துக் கொண்டு வாக்களிப்பதை விட டூர்தான் முக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஜனநாயக கடமையாற்றுங்கள் என ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு சூர்யா வீட்டிலேயே இப்படி ஒருவர் ஓட்டு போடாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. ஒரு வேளை நேபாளம் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டை புக் செய்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. மேலும் அவர் தபால் வாக்குகளையாவது அளித்தாரா என்பதும் தெரியவில்லை.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.