திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு பகுதியில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் .
இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு பூஜை காவடி எடுத்தல் என திருவிழா நடைபெற இருந்தது. நாளை நிறத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது இந்த நிலையில் இன்று காலையில் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது
இந்த நிகழ்ச்சிகளில் தங்களுடைய பட்டியல் இன சமூகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்களுக்கு அந்த கோவிலில் சம உரிமை வேண்டும் என்று கூறி திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு பகுதியில் பட்டியல் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணர் திருவாரூர் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் குடவாசல் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் இரு தரப்பு மக்களிடம் பேசினார்கள்
பேச்சுவார்த்தையின் பொழுது பட்டியலின மக்கள் எங்களுக்கு அந்த கோவிலில் சம உரிமை வேண்டும் எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அதற்கு மேல் வகுப்பு மக்கள் நாங்கள் இந்த குத்து விளக்கு பூஜையை நிகழ்ச்சியையும்,காவடி எடுக்கும் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் பட்டியலின மக்கள் இது குறித்து எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திடீரென வந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என தெரிவித்தார்கள்.
இரு தரப்பு விளக்கத்தையும் கேட்ட பிறகு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் கோவிலில் பூட்டினர் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு கோவில் திறக்கப்படும் என தெரிவித்து சென்றார்கள்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.