இதனால்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உதயநிதிக்கு கொடுக்கல.. உண்மையை உடைத்த பயில்வான்..!

பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் திரைக்கு பின்னால் நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வழங்காதது ஏன் என்பது குறித்து தனது வீடியோவில் பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்க மணி ரத்னம் மறுத்துவிட்டார். ரெட் ஜெயண்ட் மூலம் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து படங்களுமே நல்ல லாபத்தை பார்த்து வருகிறது. இதனால் தங்களின் படத்தை வாங்கும்படி ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் தயாரிப்பாளர்கள் கெஞ்சி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் தினமும் படம் பார்க்கிறார். எல்லா படத்தையும் அவர் வாங்குவதில்லை. தனக்கு பிடித்த படங்களை மட்டும்தான் வாங்கி டிஸ்ட்ரிபியூஷன் செய்கிறார். சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்தார். அந்தப் படம் வசூலில் அசுர சாதனை செய்தது. 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது. இதனால் கமல்ஹாசன் மகிழ்ச்சியில் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை நேரிலும் சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ் நாட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியானது. பொன்னியின் செல்வன் போஸ்டர்களிலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருந்தது. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் லோகோ இடம்பெறவில்லை.

இடையில் ஏதோ நடந்துள்ளது. தியேட்டரில் ரிலீஸ் செய்ய ரெட் ஜெயண்ட் நிறுவனம் சில சதவீத தொகை பெற்றுக்கொள்கிறது. இது முழுக்க முழுக்க வெள்ளை பணம்தான். மணிரத்னத்திற்கு தனது படத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஆகையால் தனது படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுத்தால் கட்டுப்படியாகாது என்பதால் அவுட்ரேட்டில் படத்தை ரிலீஸ் செய்வது அல்லது தானே ரிலீஸ் செய்வது என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் லைகா ப்ரடெக்ஷன்ஸ் சுபாஷ்கரன் படத்தின் ரிலீஸ்க்கு முன்னாலே லாபம் பார்க்க நினைக்கிறார். இதனால் பொன்னியின் செல்வன் டிஸ்ட்ரிபியூஷன் விவகாரம் ஊசல் ஆடுகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை 25 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளது. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

30 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

2 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

3 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

3 hours ago

This website uses cookies.