தமிழகம்

தூரத்து உறவினர் செய்யும் வேலையா இது? கணவர் மீது மனைவி வெறிச்செயல்!

மதுரையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து முகத்தை சிதைத்து வீசிய மனைவி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகம் சிதைந்த நிலையில் ஒரு மனித உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், பிரேதப் பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த நபர் ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒட்டன்சத்திரம், இடும்பன்குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திகணேஷ் என்பது தெரிய வந்து உள்ளது.

எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால், இவருக்கும், அவரது மனைவி பரமேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சக்தி கணேஷின் தூரத்து உறவினரான பெயிண்டர் வேலை செய்யும் கண்ணன் என்பவர், சக்தி கணேஷின் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்து உள்ளார். அப்போது, கண்ணனுக்கும், பரமேஸ்வரிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த சக்தி கணேஷ், இருவரிடமும் இதுகுறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த பரமேஸ்வரி, தனது கணவர் சக்தி கணேஷை கொலை செய்ய கண்ணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் அருகே உள்ள ரயில் தண்டவாளம் அருகில், சக்தி கணேஷும் கண்ணனும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெய்லி விஜய்க்கு வீடியோ அனுப்புவேன்.. நிறைவுற்ற விஜயின் விருந்து உபசரிப்பு விழா!

இதில் ஆத்திரமடைந்த கண்ணன், போதையில் இருந்த சக்தி கணேஷை கொலை செய்து விட்டு, அவரது முதத்தைச் சிதைத்து பின்பு அவரது உடலை தண்டவாளத்தில் வீசி விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

5 minutes ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

1 hour ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

1 hour ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

2 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

3 hours ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

3 hours ago

This website uses cookies.