தமிழகம்

அதிகாலையில் மனைவி செய்த காரியம்.. பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கிடந்த கணவர்.. அரியலூரில் என்ன நடந்தது?

அரியலூரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்த கணவரைக் கொடூரமாகத் தாக்கி, பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னப்பா – பச்சையம்மாள் தம்பதி. இவர்களுக்கு பாலமுருகன் மற்றும் பானுப்பிரியா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பானுப்பிரியா திருமணம் முடிந்த நிலையில், தாமரைக்குளம் என்னும் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், மதுவுக்கு அடிமையான சின்னப்பா, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பானுப்பிரியா தாயின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சின்னப்பா மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் பக்கத்துக்கு வீட்டில் சென்று உறங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை சின்னப்பா தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்து உள்ளார்.

இதற்கு காரணமாக, மதுபோதையில் தனது கை, கால்கள் மற்றும் அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் பச்சையம்மாள் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சின்னப்பாவின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: ’காருக்கு இருக்கும் மதிப்பு என் மகனுக்கு இல்லையா?’.. 9 மணிநேரமாக திக் திக்.. கதறும் தாய்!

ஆனால், இதனிடையே இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, உடனடியாக அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சின்னப்பாவின் தலையில் பலமாக தாக்கி இருப்பதும், பிறப்புறுப்பை அறுத்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மனைவி பச்சையம்மாளை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, குடித்துவிட்டு வந்து தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால், கணவரை கொலை செய்ததாக பச்சையம்மாள் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இதனை அதிகாலை 3 மணியளவில் நிகழ்த்தியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!

சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையும் படியுங்க: இந்த பாலா…

10 minutes ago

இந்த பாலா படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவேண்டியது! ஆனால் நான் கடவுள் இல்லை?

நிறைவேறாத கூட்டணி பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும்…

16 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பால் பீதியில் CM : இபிஎஸ் பதிலடி!

அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி…

58 minutes ago

நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளரா போடுங்க : கொளுத்தி போட்ட பாஜக தலைவர்!!

அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

2 hours ago

லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…

2 hours ago

தே.ஜ கூட்டணிக்கு வாங்க… முக்கிய கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…

3 hours ago

This website uses cookies.