Categories: தமிழகம்

வேறொருவருடன் மனைவி உல்லாசம்.. மரத்தல் ஏறி நோட்டமிட்ட கணவன் : மன்மதன் படத்தையே மிஞ்சிய சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள அந்தேரி ஊராட்சி வீரா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் பழனிவேல்.

இவரும் வாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் சங்கீதா என்பவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கல்லூரி காலங்களில் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இருவரும் இது வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பழனிவேல்-சங்கீதா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் கணவன் மனைவி இருவரும் நல்லபடியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கீதா அரசு பணியில் சேர்ந்துள்ளார்

அப்பொழுது இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. பின்னர் மனைவி சங்கீதா அவரது அம்மாவான சுகமாணிக்கத்தின் அரவணைப்பில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது.

பின்னர் கணவனும் தனது மனைவியின் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் வீட்டிற்கு சங்கீதாவின் வீட்டிற்கு உறவினரான தினேஷ் என்ற இளைஞர் நட்பு ரீதியாக வந்து சென்றுள்ளார்.

நட்பு நாளடைவில் சங்கீதாவுடன் காதலாக மலர கள்ளக்காதலாக உருவெடுத்து இவர்களது நட்பு தொடர்ந்து இருந்துள்ளது. இதில் கணவன் அவரது கள்ளக்காதல் குறித்து கேட்ட நிலையில் இனி பழனிவேலுடன் குடும்பம் நடத்த முடியாது என்று கூறிய பெண் ஆசிரியர் சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.

இதில் மனவிவியை விட்டு பிரிந்து வாழ முடியாது என பழனிவேல் நீதிமன்றத்தில் பதில் அனுப்பியதாகவும் குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறி வந்த நிலையில் நேற்று இரவு பழனிவேல் வீட்டிற்கு செல்லும் பொழுது சங்கீதா அவரது கள்ளக்காதலனான தினேசை வீட்டிற்கு போன் செய்து வர வைத்துள்ளார்.

யாரும் இல்லாத வேலையில் வீட்டினில் சென்ற தினேஷ் படுக்கையறையில் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல் கடைக்குச் சென்று இரண்டு பூட்டுகளை வாங்கி வந்து வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, கள்ளக்காதலன் தினேஷின் மனைவி ஹரிணி என்பவரை அழைத்து வந்து காட்டியுள்ளார்.

பின்னர் மத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்து அங்கு வந்த மத்தூர் போலீசார் கதவை திறக்க கூறியதன் பேரில் ஆசிரியர் சங்கீதா மட்டும் வெளியே வந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பழனிவேல் அவரது மனைவி சங்கிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணவனை மனைவி சங்கீதா செருப்பால் அடிப்பேன் எனக் கூறிய பொழுது ஆத்திரத்தில் பழனிவேல் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி கையில் பிடித்துக் கொண்ட பழனியில் வீட்டை திறந்து காட்டு யாரும் இல்லை என்றால் என்னை செருப்பால் அடி என செருப்பை அவரிடம் கொடுத்து வாக்குவாதம் செய்தார்.

அப்பொழுது அங்கு வந்த சங்கிதாவுடன் பணிசெயும் மற்றொரு பெண் ஆசிரியரின் கணவரின் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து ஆசிரியர் சங்கீதா சென்றுவிட்டார்.

இதில் வீட்டின் உள்ளே இருந்த கள்ளக்காதலன் தினேஷ் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்த நிலையில் போலீசார் பழனிவேலை அறிவுரை கூறிய அனுப்பி வைத்த நிலையில் அங்கிருந்து பழனிவேல் சென்ற பொழுது ஆசிரியர் சங்கீதாவின் உறவினர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் கணவனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் இருந்ததை தட்டி கேட்ட கணவனுக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கையும் களவுமாக பிடித்து வீட்டை பூட்டு போட்டு கள்ளக்காதலன் மனைவியை அழைத்து வந்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

18 minutes ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

33 minutes ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

49 minutes ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

2 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

3 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

3 hours ago

This website uses cookies.