திருப்பூரில் கணவனைக் கொல்வதற்காக 20 சவரன் தங்க நகையை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த தாமரை கார்டனைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரை ஐந்து பேர் கொண்ட கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் துவங்கினர். இதன்படி, கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில், கோபாலகிருஷ்ணன், அஜித், சிம்போஸ், சரண் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில், சையது இர்ஃபான் என்பவர் ரமேஷைக் கொலை செய்ய 8 லட்சம் ரூபாய் கொடுத்தது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், சையது இர்ஃபானிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
இவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில், கொல்லப்பட்ட ரமேஷின் மனைவி விஜயலட்சுமிக்கும், சையது இர்ஃபானுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல், தனது கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த தனது கணவர் ரமேஷை கொலை செய்ய விஜயலட்சுமி, தான் அணிந்திருந்த 20 சவரன் நகையை சையது இர்ஃபானிடம் கழற்றி கொடுத்ததும், அதனை அவினாசியில் உள்ள இந்தியன் வங்கியில் அவர் அடகு வைத்து பணம் பெற்றதும் தெரிய வந்து உள்ளது.
இதையும் படிங்க: “நாங்கள் விலகியிருக்கிறோம்”.. மீண்டும் அரசியல் அக்கணம் வைத்த திருமாவளவன்!
இதையடுத்து விஜயலட்சுமி, சையது இர்ஃபான் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த அரவிந்த் உள்பட கூலிப்படையைச சேர்ந்த 5 பேர் என எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.