தமிழகம்

காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் சிமெண்ட் போட்டு மூடிய மனைவி.. இறுதியில் யாரும் எதிர்பாரா சம்பவம்!

உபியில், காதல் கணவரை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் சிமெண்ட் போட்டு மூடிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்தவர் முஸ்கான் ரஸ்தோகி (27). இவருக்கும், சவுரப் ராஜ்புட்(29) என்பவரும் கடந்த 2016ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளனர். இதில், ராஜ்புட் வர்த்தக கப்பல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மேலும், இருவீட்டார் எதிர்ப்பால், மீரட்டின் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.

இந்த தம்பதிக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், முஸ்கானுக்கு ஷகில் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கப்பலிலேயே மாதக்கணக்கில் சவுரப் பணியில் இருந்து வந்தது, முஸ்கானுக்கு வசதியாக இருந்துள்ளது.

இந்த நிலையில், சவுரப் வேலை செய்த கப்பல், கடந்த மாதம் லண்டன் வந்துள்ளது. அப்போது, மனைவி முஸ்கானின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரப், லண்டனில் இருந்து புறப்பட்டு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்கான், சவுரபை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதன்படி, கடந்த மார்ச் 4ஆம் தேதி, தனது கணவருக்கு உணவில் துாக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனால் அவர் மயங்கியதும், கள்ளக்காதலன் ஷகிலுடன் சேர்ந்து, கத்தியால் 15 துண்டுகளாக சவுரப்பை வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர், பெரிய டிரம்மில் அந்த துண்டுகளைப் போட்டு மூடிவிட்டு சிமெண்டால் பூசியுள்ளனர்.

இதனிடையே, சவுரபை காணாமல் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, அவர் மணாலி சென்றுவிட்டதாகவும், தானும் செல்ல இருப்பதாகவும் கூறிய முஸ்கான், எதுவுமே நடக்காதது போல் கள்ளக் காதலனுடன் மணாலி சென்றுள்ளார். மேலும், அங்கிருந்தபடியே கொலையை மறைப்பதற்காக, சவுரபின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலேயே புகைப்படங்களை முஸ்கான் பதிவிட்டுள்ளார்.

ஆனால், சவுரபை மொபைல்போனில் அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, 10 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாமல் கிடந்த முஸ்கான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் பிரபல ஹீரோ…25 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் என்ட்ரி.!

இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கதவை உடைத்து வீட்டினுள் சென்ற போலீசார் டிரம்மை அறுத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் சவுரப்பின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. இதனையடுத்து, முஸ்கானையும், ஷகிலையும் தேடிய போலீசார், நேற்று அவர்களைக் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது, சவுரபை திட்டம்போட்டுக் கொன்றுவிட்டு டிரம்மில் அடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், கொலையை மறைக்க மணாலியில் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

9 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

10 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

11 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

11 hours ago

This website uses cookies.