நாமக்கல் ; கணவனை கூலிப்படையை வைத்து கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் தேவராஜ் (34).
திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாசம்பாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகே கடந்த 19ம் தேதி, தேவராஜ் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து 27 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தேவாவின் மனைவி காயத்ரி என்கிற சரண்யா, சங்ககிரி பகுதியை சேர்ந்த தேவாவின் நண்பர் (கள்ளக்காதலன்) விமல்குமாருடன் (32) சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கொலை செய்தது தெரிய வந்தது.
கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்த குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் (27) மற்றும் தேவாவின் மனைவி சரண்யா, கள்ள காதலன் விமல் குமார்(32) ஆகியோரை கைது செய்து ஊரக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சங்ககிரி சேர்ந்த விமல் குமார் மற்றும் தேவராஜ் இருவரும் நண்பர்கள் என்பதும், இருவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விமல் குமாருக்கும், சரண்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எலக்ட்ரீசியன் தேவராஜனுக்கு 10 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரித்த திருச்செங்கோடு ஊரக காவல் ஆய்வாளர் பாரதி மோகன், போடப்பட்ட இன்சூரன்ஸ் பணத்தில் இருந்து 2 லட்சம் ரூபாய் கூலிப்படைக்கு கொடுப்பதாக விமல்குமார் உறுதி அளித்து இருந்ததும், இதனை அடுத்து விமல் குமாரின் நண்பர் கோபாலகிருஷ்ணன் சில ஆட்களை வைத்து தேவராஜை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர், கூலிப்படையை வைத்து கொலை செய்தது, இன்சூரன்ஸ் தொகைக்காக கொலை செய்தது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறைக்கு மூவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.