மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பெருமாள் லே-அவுட் பகுதியைச்சேர்ந்தவர் ஹக்கீம்(36).இவருக்கு மனைவி சாயிதா(32) என்ற மனைவியும்,அல்ஷிபா(8) என்ற மகளும் உள்ளனர்.
சாயிதா கடந்த 17 ஆம் தேதி குழந்தையுடன் மாயமாகி விட்டதாக கணவர் ஹக்கீம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மாயமான சாயிதா மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சாயிதா மற்றும் குழந்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கணவர் ஹக்கீம் தன் மீது சந்தேகம் கொள்வதால் அவருடன் வாழ விருப்பமில்லை என்று கூறி தனது தந்தை மஜீத்துடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
ஆத்திரமடைந்த ஹக்கீம் நேற்றிரவு மாமனார் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த மனைவியை அழைத்துள்ளார்.
அவர் வர மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றி கட்டத்தில் ஹக்கீம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சாயிதா,மாமனார் மஜீத்(72) மற்றும் மாமியார் சமையாவை (62) சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,தப்பி ஓடிய ஹக்கீமை தேடி வருகின்றனர்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.