லிவிங் டூகெதரில் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்து திருமணம் செய்த பின் கருவை கலைத்து ஏமாற்றிய கணவனுடன் சேர்த்து வைக்க கோரி பெண் தர்ணா.
திருப்பூர் பாரதிநகரை சேர்ந்த பால்ராஜ் – வசந்தா ஆகியோரின் மகள் பரிமளா (வயது 31). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பரிமளா கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள உறவின வீட்டிற்கு செல்லும் போது, பேருந்தில் புதுக்கோட்டை மச்சுவாடி
வ உ சி நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கமாகி, பின்னர் அவரை காதலித்து வந்த நிலையில், ஒன்றரை காலம் லிவிங் டு முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒன்றை வருடம் கழித்து சதீஷ்குமார் வேலை நிமித்தமாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
பின்னர் 2022 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பி வந்த சதீஷ்க்கு பெற்றோர் சம்மதத்துடன் முன்னிலையில் புதுக்கோட்டை திருவப்பூரில் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி வரை திருப்பூரில் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சதீஷ் குடும்பத்தினர், சதீஷை திருப்பூரில் இருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
சொந்த ஊர் வந்த சதீஷ் பரிமளாவிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் பலமுறை சதீஷை தொடர்பு கொண்ட பரிமளா, நேற்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவரை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், புதுக்கோட்டை வ உ சி நகரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து, தனது கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் திருமணம் ஆகிய மூன்று ஆண்டுகளில் நான்கு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், சதீஷை தன்னிடமிருந்து குடும்பத்தினர் தான் இருக்கிறார்கள் என்றும், குடும்பத்தினரிடமிருந்து தனது கணவர் சதீஷை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்தார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பரிமளாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் சதீஷ் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, பரிமளா குடும்பத்தினர் சதீஷை பிரித்து விட்டனர் என்று கூறுவது முற்றிலும் தவறானது.
பரிமளாவை விட்டு பிரிவது சதீஷின் தனிப்பட்ட விருப்பம், மேலும் இது குறித்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குடும்பத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.