Categories: தமிழகம்

சாலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி : தலைமறைவான கணவனுக்கு போலீசார் வலை…

மதுரை : அலங்காநல்லூர் அருகே இளம்பெண் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குறவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேங்கையன். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வேங்கையன் சென்னையில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கண்ணம்மாள் கணவரை பிரிந்து, மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறவன்குளத்துக்கு திரும்பி வந்த வேங்கையன், மனைவி கண்ணம்மாளை சமரசம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று சாலையோரத்தில் கண்ணம்மாள் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார்.

கண்ணம்மாளை வெட்டி படுகொலை செய்த கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் கண்ணம்மாளின் கணவர் வேங்கையன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கண்ணம்மாளின் கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கிய பின்பு கண்ணம்மாளின் கொலைக்கான முழுவிபரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KavinKumar

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

58 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

3 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

3 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

4 hours ago

This website uses cookies.