Categories: தமிழகம்

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த மனைவி.. துரத்திக் கொண்டு வந்த கணவன் : நெஞ்சை உலுக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பொட்டிபுரம் கிராமம். இங்கு இந்திரா காலனியில் வசித்து வருபவர் ராமராஜ் வயது 35. இவரது மனைவி வீரமணி(25) குழந்தைகள் ராஜபாண்டி(5) ஜீவிதா(3) ஈஷா ஸ்ரீ (2). இவர்கள் கேரளாவில் உள்ள காரித்தோடு என்ற பகுதியில் ஏலத்தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவரது சொந்த ஊரான பொட்டிபுரத்தில் இவரது மனைவி மற்றும் இவரது குழந்தைகள் வசித்து வந்தனர். இந்நிலையில் இவருக்கு அதிக கடன் சுமை இருந்து வந்ததால் வீட்டில் விசேஷம் வைத்து அதில் வரும் செய்முறை மூலமாக கடனை அடிப்பதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய குலசாமி கோயிலுக்கு சென்று அவரும் அவரது குழந்தைகளும் மொட்டை அடித்து விட்டு ஊருக்கு திரும்பி உள்ளனர்.

இன்று அவரது வீட்டில் விசேஷம் வைப்பது பற்றி மனைவியிடையே கலந்து ஆலோசித்த பொழுது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ராமராஜ் உடைய மனைவி வீரமணி ஆத்திரமடைந்து தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மூன்று குழந்தைகளையும் உள்ளே தள்ளிவிட்டு தானும் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவரை சமாதானம் செய்வதற்காக பின்னால் ஓடி வந்த கணவன் ராமராஜ் குழந்தைகளுடன் மனைவி கிணத்தில் விழுவதைக் கண்டு அவரும் கிணற்றில் குதித்துள்ளார் .

கிணற்றின் உள்ளே நீர் இல்லாத காரணத்தினால் கிணற்றில் விழுந்த ஐந்து நபர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.

தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த ஐவரையும் படுகாயத்துடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட ஐவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வழியிலேயே ஜீவிதா, ஈஷா ஸ்ரீ ஆகிய இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த மூன்று நபர்களும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!

வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…

6 hours ago

நான் சொல்றத செஞ்சு காட்டுங்க..இந்திய அணிக்கு சவால்..முன்னாள் பாகிஸ்.வீரர் சர்ச்சை பேச்சு.!

இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…

7 hours ago

அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!

அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…

8 hours ago

குடிகாரனுக்கு ஏன் பொண்ணு கேட்குதா…தூது விட்ட நபரை துரத்தி அடித்த பிரபல நடிகையின் அம்மா.!

அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…

9 hours ago

WHAT BRO..விஜய் மகன்னு எதுக்கு சொல்லுறீங்க..செய்தியார்களிடம் கடுப்பான நடிகர்.!

கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…

10 hours ago

Ind Vs Nz :விறு விறுப்பான நாக் அவுட் போட்டி..முதலிடத்தை தட்டிப் பறிக்க போவது யார்.!

பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…

11 hours ago

This website uses cookies.