Categories: தமிழகம்

கைக்குழந்தையுடன் முன்னாள் காதலனுடன் தஞ்சமடைந்த மனைவி.. காதலன் படுகொலையில் திருப்பம்!!

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் குமார் அவரது மகன் சுதாசந்தர் ( வயது22 )இவர் தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார் .

சுதாசந்தர் கடந்த 31ம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் ராகவி என்ற பெண்னுடன் வினாயகபுரத்திலுள்ள ஒரு கடைக்கு சென்று அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றுகொண்டிருந்தபோது வில்லிவாக்கம் சாலையில் ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமடக்கி அந்த பெண்ணின் கண் முன்னே கையில் தயாராக வைத்திருந்த பட்டா கத்தியால் சுதாசந்தரை சரமாரியாக தலை முகம் கழுத்து மார்பு ஆகிய பகுதியில் சரமாரியாக வெட்டி கொன்று அங்கிருந்து கொலையாளிகள் தப்பியோடினர்.

இது குறித்து புழல் காவல் புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் , ராகவி ( வயது 19) என்ற பெண் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் ஆவடி வெள்ளச்சேரியை சேர்ந்த வசந்த் என்பவருடன் திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் தற்போது கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது முன்னாள் காதலரான இறந்த சுதாசந்திரை திருமணம் செய்து கொண்டு கடந்த இரு மாதங்களாக வினாயகபுரம் பகுதியில் வசித்து வந்த இவர்களை ராகவியின் உறவினர்கள் கொலை செய்திருப்பதாக தெரியவந்தது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜாராம் உத்திரவின் பேரில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததின் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கிருந்த ராகவியின் அண்ணண் ஆவடி மோரை வெள்ளச்சேரியை சேர்ந்த ராபின் என்ற பரத் ( வயது 21) அதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா ( வயது 28 ) ராகவியின் சித்தப்பா உதயராஜ் ( வயது 23) அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ( வயது 25) ஆகியோரை கைதுசெய்து அவர்களிடம் இரண்டு பட்டாக்கத்தியையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் ராகவியின் கணவர் வசந்த் மற்றும் அவரது தந்தை
வாசுதேவன் ஆகிய இருவரையும் தேடிவந்த நிலையில் அவர்களை கைது செய்து விசாரணைக்கு பின்னர் புழல் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

15 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

16 hours ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

17 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

18 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

18 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

19 hours ago

This website uses cookies.