கோவை : காட்டுபன்றி குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இன்று காலை வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திருவள்ளுவர் நகரை அடுத்த நர்சரி பகுதியில் காட்டு பன்றி ஒன்று மலையில் இருந்து கீழே இறங்கி சாலையைக் கடந்து உள்ளது. அப்போது, இவரது வாகனத்தின் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினர் காட்டு பன்றியை தேடும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.